செவ்வாய், 3 ஜனவரி, 2012

நகுலுடன் இணையும் இளம் நாயகி


தமிழ் திரையுலகில் நாயகன் நகுலுடன் மிருதுளா என்ற புதுமுக நாயகி இணைந்து நடிக்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் வல்லினம் படத்தில் நாயகன் நகுலுடன் இணைந்து புதுமுக நாயகி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் நாயகன் நகுலுடன் பிந்து மாதவியை இணைத்து நடிக்க வைக்க படக்குழு முடிவெடுத்தது.
இதையடுத்து நகுல்-பிந்துமாதவி இணைந்து நடித்த சில நாட்களில் நாயகன் நகுலுக்கு பிந்து பொருத்தமான நாயகி அல்ல என்று படக்குழுவினர் தீர்மானித்துள்ளார்கள்.
தற்போது மிருதுளா என்ற இளம் புதுமுக நாயகியாக படத்தில் நடிக்கிறார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
மிருதுளா கும்பகோணத்தை சேர்ந்த பெண். நன்றாக தமிழ் பேசத் தெரிந்த இளம் பரத நாட்டியக் கலைஞி என்பதால் இப்படத்தில் நடிக்க வைக்கிறோம் என்று வல்லினம் பட இயக்குனர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக