ஞாயிறு, 8 ஜனவரி, 2012

சமீரா ரெட்டியிடம் கடனட்டை மோசடி


தமிழில் முன்னணி நடிகையாக திகழும் சமீரா ரெட்டியிடம் கடனட்டை மோசடி நடந்துள்ளது.
இந்த மோசடியின் மூலம் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை அவரது கணக்கில் இருந்து பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி சம்பவம் குறித்து சமீரா கூறுகையில், சமீபத்தில் எனது கைபேசியில் பேசிய ஒரு நபர் தன்னை அமெரிக்க வாழ் இந்தியர் என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுத்து விட்டதாக தெரிவித்தார். இதனால் குழம்பிப் போன நான் என்னுடைய கடனட்டை கணக்கை சரிபார்த்தேன் சுமார் ரூ.4 லட்சம் பணம் எடுக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த நான் மீண்டும் அந்த நபரிடம் பேசினேன். அப்போது பேசிய நபர் தான் பணத்தை எடுத்த பிறகு கவனித்த போது தான் உங்கள் பெயரில் வங்கிக்கணக்கு இருந்தது தெரிந்தது, நான் உங்கள் ரசிகன்.
எனவே நான் எடுத்த பணத்தை உங்கள் கணக்கிலேயே போட்டு விட்டேன். நண்பர்கள் எடுத்த பணத்திற்கு நான் பொறுப்பாக மாட்டேன் என்றார்.
அதோடு கடனட்டையை கையாளும் வழிமுறைகளையும் அந்த நபர் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவர் எனது கணக்கில் ரூ.1 லட்சம் போட்டு விட்டார்.
மீதி 3 லட்சம் ரூபாய் மோசடியாகிவிட்டது, அதனால் இனிமேல் கடனட்டை ‌போன்றவைகளை உபயோகிக்க போவதில்லை என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக