புதன், 25 ஜனவரி, 2012

கொலை வெறி பாடல்: விவேகா கருத்து சொல்ல மறுப்பு


உலகப்புகழ் பெற்ற கொலைவெறி பாடலைப்பற்றி கொலிவுட் கவிஞர் விவேகா கருத்து சொல்ல மறுத்துள்ளார்.
கொலிவுட்டில் கவிஞர் விவேகா எழுதிய ஆனந்தம், ரன், சமுத்திரம், வானத்தைப்போல, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படப்பாடல்கள் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் வெற்றி பாடல்களாக வலம் வந்தன.
கடந்த 2011ம் ஆண்டின் அதிகமான வெற்றிப்படங்களில் தரமான பாடல்களை கொடுத்த கொலிவுட் கவிஞராக பெருமை கொள்ளும் விவேகா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயக்குனர் ஷங்கரின் 'நண்பன்' படத்தில் வரும் 'என் ப்ரெண்ட் போல யாரு மச்சான்' பாடல் வெற்றி பாடலாக அமைந்துள்ளது.
சமீபத்தில் விவேகா கூறியதாவது, கொலிவுட்டில் தற்போது என்னிடம் என்பதுக்கும் மேற்ப்பட்ட படங்கள் இருக்கின்றன.
சூர்யா நடிக்கும் மாற்றான், சிங்கம் -2 , சகுனி, கரிகாலன், அரவான், வல்லினம், சிலுசிலுன்னு ஒரு சந்திப்பு, இஷ்டம், பூலோகம் என்று வரிசையாக படங்களுக்கு பாடல்களை எழுதுகிறேன்.
என்னுடைய பாடல்கள் அனைத்து தரப்பினர் மத்தியிலும் வெற்றிப் பாடல்களாக ஒலிப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. சமீபத்தில் என் பாடல்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.
துனுஷ் எழுதிய 'கொலை வெறி'பாடல் பற்றி என்னிடம் கருத்து கேட்டுள்ளார்கள். அந்தப்பாடல் பற்றி எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று கவிஞர் விவேகா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக