புதன், 29 பிப்ரவரி, 2012

கோச்சடையானில் நடிக்கிறார் நாகேஷ்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையானில் மறைந்த நடிகர் நாகேஷ், நடிப்பதாக இயக்குனர் சவுந்தர்யா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் 3D படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இயக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்குனர் மேற்பார்வையிடுகிறார்.
இந்நிலையில் வரும் மார்ச் 2ம் திகதி முதல் இங்கிலாந்தில் ‘கோச்சடையான்’ படப்பிடிப்புகள் நடைபெறுகிறது.
‘கோச்சடையான்’ பட பணிக்காக ஹொங்காங் சென்றிருக்கும் ரஜினியின் இளையமகளும், இயக்குனருமான சவுந்தர்யா டுவிட்டரில் கூறும்போது, கோச்சடையான் பணிக்காக பட குழுவினருடன் ஹொங்காங்கில் இருக்கிறேன்.
பணிகள் சிறப்பாக நடக்கிறது. மார்ச் 2ம் திகதி முதல் இங்கிலாந்தில் படப்பிடிப்ப நடைபெற உள்ளது என்று கூறி உள்ளார்.
இந்நிலையில் 'கோச்சடையான்' படத்தில் மறைந்த நாகேஷ் நடிப்பதுபோல், அவரது காட்சிகள் கிராபிக்ஸில் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தன்னுடைய இயல்பான நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் இன்னும் நிலைத்து நிற்கும் நாகேஷை மீண்டும் திரையில் கோச்சடையான் படக்குழு காண்பிக்க உள்ளது.

அஜீத்குமாரை புகழ்ந்த பார்வதி ஓமனகுட்டன்


ஷக்ரி டோலட்டி இயக்கத்தில் பில்லா 2 படத்தில் நடித்துள்ள 'தல' அஜித்தை, படத்தின் நாயகி பார்வதி ஓமனகுட்டன் புகழ்ந்து பேசியுள்ளார்.
பாலிவுட் படத்தில் நடித்துள்ள பார்வதி,  கொலிவுட்டில் அஜித்தின் பில்லா 2 படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
நான் பாலிவுட் படத்தில் நடித்
ததால் திரையுலக பாடம் கற்றேன். நட்சத்திர நடிகர்களுடன் சேர்ந்து நடித்தால் திரையுலகில் வேகமாக பிரபலமாகலாம் என்ற விடயத்தை பாலிவுட் படங்களிலிருந்து கற்றுக்கொண்டேன்.
அந்த வகையில் பில்லா படம் எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது, ஆரம்பத்தில் எனக்குள் இனம் புரியாத நடுக்கும் ஏற்பட்டது.
வீட்டில் மலையாளம் பேசிப் பழக்கப்பட்ட நான், தமிழில் நடிக்கும் போது தடுமாறினால் என்ன செய்வது என்று தயங்கினேன்.
இருப்பினும் எனக்கு பிடித்தமான நாயகன் அஜித்துடன் இணைந்து நடிப்பதால் நான் உற்சாகமடைந்தேன்.
அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவமாகும். பாரபட்சமின்றி அனைவரையும் மதிக்கும் அவரின் குணத்தைக் கண்டு வியப்படைந்தேன் என்று நாயகி பார்வதி ஓமனகுட்டன் தெரிவித்துள்ளார்.

சந்தோஷத்தில் காஜல் அகர்வால்


தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்த காஜல் அகர்வால், தற்போது பாலிவுட்டில் முன்னணி நாயகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தென்னிந்திய திரைப்பட நாயகர்களின் படங்களின் நாயகியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.
தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த 'பிஸினஸ்மேன்' படத்தில் நாயகியாக நடித்தார். அப்படம் வரவேற்பை பெற்றது.
தமிழில் விஜய்யுடன் 'துப்பாக்கி', சூர்யாவுடன் 'மாற்றான்' என இரு முன்னணி நாயகர்களின் படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார். இவ்விரண்டு படங்களுக்குமே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் தமிழில் வெளியான 'சிங்கம்' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவ்கானின் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். அப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் ஆனது.
தற்போது காஜல் அகர்வால், பாலிவுட்டில் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான நிரஜ் பாண்டே( 'A WEDNESDAY' இயக்குனர்) இயக்க இருக்கும் 'SPECIAL CHABBIS' என்னும் படத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகினை தொடர்ந்து இந்தியிலும் முன்னணி நாயகர்களின் படங்களின் வாய்ப்புகள் வருவதால் காஜல் அகர்வால் சந்தோஷத்தில் சிக்கி தவிக்கிறார்.

விஷாலுக்கு பொருத்தமான நாயகிகளைத் தேடும் சுந்தர்.சி


விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு பொருத்தமான நாயகிகளை இயக்குனர் சுந்தர்.சி தேடி வருகிறார்.
கொலிவுட்டில் மசாலா கஃபே படத்தை இயக்கும் சுந்தர்.சி, அடுத்து விஷால் மூன்று வேடங்களில் நடிக்கும் படத்தை இயக்கத்திட்டமிட்டுள்ளார்.
இப்போது விஷாலுக்கு பொருத்தமான நாயகிகளை சுந்தர்.சி, மும்முரமாக தேடி வருகிறார்.
இதுகுறித்து இயக்குனர் சுந்தர்.சி கூறியதாவது, விஷால் மூன்று வேடங்களில் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளில் வெளியிட உள்ளோம்.
மூன்று வேடங்களில் விஷால் நடிக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெறும் என்று உறுதியாக நம்பிக்கை வைத்துள்ளேன்.
இந்திய திரையுலகமே விஷாலின் மூன்று வேடங்களை பார்த்து வியக்குமளவுக்கு, இதுவரை ரசிகர்கள் காணாத வேடங்களில் விஷாலை இந்தப்படத்தில் பார்க்கலாம்.
இப்போது விஷாலுக்கு பொருத்தமான நாயகிகளை தேடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்தில் வெளிவரும் பில்லா 2 இசை


கொலிவுட்டில் அஜீத்குமார் நடித்துள்ள “பில்லா 2” திரைப்படத்திற்கான இசையை அடுத்த மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
அஜீத்குமார், பார்வதி ஓமணக்குட்டன், ரகுமான், பிரபு நடித்துள்ள பில்லா 2 திரைப்படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
பில்லா 2 திரைப்படத்தின் இறுதிக்காட்சியை ஜார்ஜியா பனிமலையில் படக்குழுவினர் படமாக்கியுள்ளார்கள்.
பில்லா 2 திரைப்படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா, தீம் பாடலை உருவாக்குவதற்கு நீண்ட நாட்கள் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் பில்லா 2 படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான Sunir Kheterpal கூறியிருப்பது, இசை வெளியீடு மார்ச் மாத கடைசியில் இருக்கும்.
டிரெய்லர்கள் தயாராகி வருகின்றன. மார்ச் 15க்குப் பிறகு தியேட்டர்களில் டிரெய்லர்கள் வெளியிடப்படும்.
மார்ச் மாதம் முதல் படத்திற்கான விளம்பரப் பணிகளை தொடங்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சனி, 25 பிப்ரவரி, 2012

சந்தோஷ் சிவனுடன் இணையும் விஜய்


ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் அடுத்த படத்தில் இளையதளபதி விஜய் நடிக்க உள்ளார்.
கொலிவுட்டில் நண்பன் படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தில் நாயகன் விஜய் நடித்து வருகிறார்.
துப்பாக்கியில் விஜய்யுடன் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. பெப்ஸி பிரச்சினையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் இரண்டம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தோஷ் சிவனின் வேகமான மற்றும் துல்லியமான ஒளிப்பதிவை பார்த்த விஜய், துப்பாக்கி படத்தினைத் தொடர்ந்து தனது திகதிகளை சந்தோஷ் சிவன் இயக்கும் படத்திற்கு கொடுத்து இருக்கிறார்.
ஆனால் இப்படத்தினை தயாரிக்கும் நிறுவனம் குறித்து இன்னும் முடிவாகவில்லை.

தெலுங்கு பதிப்பிற்கு மாறிய மாற்றான்


மாற்றான் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு DUPLICATE என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கொலிவுட் வெற்றி இயக்குனர் கேவி.ஆனந்த், அயன் மற்றும் கோ திரைப்படத்திற்கு பிறகு மாற்றான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
சூர்யா, காஜல் அகர்வால், சச்சின் கடேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
மாற்றான் திரைப்படத்தில் நாயகன் சூர்யா, ஐந்து வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். ரஷ்யா, செர்பியா, அல்பேனியா உள்ளிட்ட பல நாடுகளில் இப்படத்தினை படமாக்கியுள்ளார்கள்.
இந்நிலையில் தெலுங்கு படக்குழு ஒன்று, மாற்றான் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பினை பெரும் விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். தெலுங்கு பதிப்பிற்கு DUPLICATE என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
மே மாதம் இறுதியில் அல்லது சூன் மாதத்தில் மாற்றானை திரைக்கு கொண்டு வர படக்குழு மும்முரமாக பணியாற்றி வருகிறது.

நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரேயா


தெலுங்கு, ஆங்கில படங்களில் ஆர்வமாக நடித்து வரும் ஸ்ரேயா தற்போது நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.  
கவர்ச்சி ஆடையில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சர்ச்சைகளிலும், வழக்குகளிலும் சந்தித்த ஸ்ரேயா தற்போது அவற்றிலிருந்து விடுபட்டிருக்கிறார்.
மேலும் தெலுங்கு, ஆங்கில படங்களில் ஆர்வமாக நடித்து வரும் இவர் ஐதராபாத்தில் பேட்டியளிக்கையில், காலம் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும்.
நேற்று போல் இன்று இருப்பது இல்லை. இன்று போல் நாளை இருப்பது இல்லை. என்னை பொறுத்தவரை, தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் திருப்தியான வேடங்களில் நடித்து முடித்து விட்டேன்.
ஆனாலும் முழுக்க முழுக்க நகைச்சுவை வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறேன். எனக்கு பிடிக்காதது திகில் கதைகள் என்றும் திகில் படங்களை நான் பார்ப்பதே இல்லை.
மேலும் அது போன்ற படங்களில் நடிக்கவும் மாட்டேன். பணம் கொடுத்து பார்க்க வரும் ரசிகர்களுக்கு இது போன்ற பயங்கர கதைகளை காட்டுவது உகந்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் தயாரிப்பில் சித்தார்த்


இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில், நாயகன் சித்தார்த் நடிக்க உள்ளார்.
கொலிவுட்டில் தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர் இயக்குனர் வெற்றிமாறன்.
தற்போது சிம்பு நடிக்கும் வடசென்னை என்ற படத்தினை இயக்க இருக்கிறார்.
வடசென்னை படத்தினை இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒரு படத்தினை தயாரிக்கவும் வெற்றிமாறன் தயாராக இருக்கிறார். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு 'GRASS ROOT FILM COMPANY' என பெயரிட்டு இருக்கிறார்.
தன்னுடைய உதவி இயக்குனரான மணி என்பவரை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்த இருக்கிறார்.
அப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்க, படத்திற்கு 'தேசிய நெடுஞ்சாலை' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
தேசிய நெடுஞ்சாலை படத்திற்கு கதை, திரைக்கதை,வசனம் ஆகிய பொறுப்புகளை வெற்றிமாறன் ஏற்க, மணி இயக்க உள்ளார்.

சினிமாவில் நிறைய சாதிக்க விரும்புகிறேன்: தமன்னா


வேங்கை படத்தின் கதாநாயகியான தமன்னா, தான் நம்பர் ஒன் இடத்திற்கு வருவதற்கு ஆசையில்லை என்று கூறியுள்ளார். 
தெலுங்கில் ராச்சா, ரிபெல் என இரு படங்களில் நடித்துவரும் தமன்னா மீண்டும் தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இவர் அளித்த பேட்டியில், வாழ்க்கையில் ஜெயிக்க நிறைய கனவு காண வேண்டும். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு எல்லாவற்றுக்கும் ஆசைப்பட வேண்டும்.
ஆனால் பேராசைப்படுவது மட்டும் கூடாது. சினிமாவில் நிறைய சாதித்து, உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆர்வப்படுகிறேன்.
ஆனால் அதற்காக நம்பர் ஒன் இடத்துக்கு வரவேண்டும் என்றெல்லாம் ஆசை கிடையாது. தமிழ் மற்றும் தெலுங்கில் நிறைய படங்கள் நடித்து வெற்றியும், தோல்வியும் கண்டுவிட்டேன்.
இப்போது சினிமாவில் நிறைய பக்குவமடைந்து இருப்பதால், இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தெரிவு செய்து நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

அலெக்ஸ் பாண்டியன் படத்தில் இரு வில்லன்களோடு மோதும் கார்த்தி


அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நாயகன் கார்த்திக்கு எதிராக இரண்டு வில்லன்கள் மோதுகிறார்கள்.
கொலிவுட்டில் நாயகன் கார்த்தி சகுனி திரைப்படத்திற்கு பின்பு இயக்குனர் சுராஜ் இயக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வருகிறார்.
அலெக்ஸ் பாண்டியன் படத்தில், நாயகன் கார்த்தி இரு வில்லன்களோடு மோதுகிறார் என்று படக்குழு கூறியுள்ளது.
பையா படத்துக்கு பிறகு நாயகன் கார்த்தியுடன் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் இணைகிறார். இந்தப்படத்தில் சுமன், மிலிந்த் சோமன் இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.
இதுகுறித்து சுராஜ் கூறியதாவது, திரைக்கதையில் இருவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
படத்துக்கு மறைந்த நடிகர் ரகுவரன் மாதிரி ஒரு நடிகரை வில்லனாக போட வேண்டும் என யோசித்தோம். இதற்கு மிலிந்த் கன கச்சிதமாக பொருந்தி வந்தார்.
படத்தின் ஓக்ஸன் காட்சியில் நாயகன் கார்த்தியுடன் சுமன், மிலிந்த் இருவரும் மோதுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

5D புகைப்பட கருவியில் காந்தம் படம்


கொலிவுட்டில் “காந்தம்” என்ற புதிய திரைப்படத்தை 5D புகைப்பட கருவியில் உருவாக்கியுள்ளார்கள்.
கொலிவுட்டில் நியு மூன் ஸ்டுடியோஸ் படக்கம்பெனி தயாரிக்கும் காந்தம் படத்தில் நாயகனாக தேஜ், அறிமுக நாயகி ராஷ்மி இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் பாடலை படமாக்க 5D புகைப்பட கருவியை இயக்குனர் சரவணன் பயன்படுத்தியுள்ளார்.
படத்துக்கு பிரேம் ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதாப் இசையமைத்துள்ளார்.
மேலும், திரைப்பட தொகுப்பு-விஸ்வா, கலை-சுரேஷ், ஓக்ஸன்- 'மிரட்டல்' செல்வம் மற்றும் பலர் பணியாற்றியுள்ளார்கள்.
இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது, நான் காமராஜ், காதலுக்கு மரணமில்லை என்று சுமார் 10 படங்களுக்கு மேல் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளேன்.
நாயகன் தேஜ் தனது நண்பர் எடுக்கும் இந்த காந்தம் படத்தை இயக்கித் தரும்படி கேட்டுக்கொண்டார். நானும் உற்சாகமாக களமிறங்கியுள்ளேன்.
இது காதல் பொழுதுபோக்கு படம். படத்தில் வரும் பாடல் காட்சியை படமாக்க 5D புகைப்பட கருவியை பயன்படுத்தியுள்ளோம். இந்த புகைப்பட கருவி வினாடிக்கு ஆயிரம் பிரேம்களை எடுக்கக் கூடியது.
பாடல் காட்சிகள் அட்டகாசமாக படமாகியுள்ளன. பெங்களூர், கொடைக்கானல், சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம் என்று இயக்குனர் சரவணன் கூறியுள்ளார்.
இந்த காந்தம், ரசிகர்களை கவர்ந்திழுக்குமா என்பது படம் வெளியானதும் தெரியவரும்.

பாலிவுட் படங்களில் நடிக்கும் நிலா


கொலிவுட்டில் அன்பே ஆருயிரே, மருத மலை படங்களில் நடித்த நாயகி நிலா, தற்போது பாலிவுட்டில் நடிக்க உள்ளார்.
கொலிவுட்டில் 'அன்பே ஆருயிரே' படத்தில் நடித்த நிலா, தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
நான் பாலிவுட்டில் 'பையாஜி சூப்பர்ஹிட்' படத்தில் சன்னி தியோல், அர்ஷாத் வார்சி, துச்ஷார் கபூர் ஆகியோருடன் நடிக்க உள்ளேன்.
அது மட்டுமல்லாமல், இந்த வருடம் ஹிந்தியில் உருவாகும் 'ஹேரா பெர்ரி' படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளேன்.
தென்னிந்திய பட உலகிற்கும் பாலிவுட்டுக்கும் மொழி தான் வித்தியாசப்படுகிறது. மற்றபடி, எனக்கு பழக்கப்பட்ட மொழியில் நடிக்கிறேன்.
தெலுங்கு படத்திலும் நான் நடிக்கிறேன். தென்னிந்திய திரையுலகிலிருந்து வந்து பாலிவுட்டில் நடிகர் மற்றும் நடிகைகள் இப்போது நடித்து வருகிறார்கள்.
நான் யாரோடும் போட்டி போட விரும்பவில்லை. பாலிவுட் பட உலகம் ரொம்ப பெரியது. இதில் எல்லோருக்கும் இடம் உள்ளது என்று நிலா கூறியுள்ளார்.

ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்துக்கொள்கின்றனர்: ஹன்சிகா


கோயம்பத்துாரில் ஆயிரக்கணக்கான ரசிகர்களிடம் மாட்டிக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கியுள்ளார் நடிகை ஹன்சிகா.
அவரை தொட்டுப்பார்க்க ரசிகர்கள் பலர் முண்டியடித்ததால் கைகளிலும், இடுப்பிலும் லேசான சிராய்ப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளானார்.
கோவை நகருக்கு வந்திருந்த ஹன்சிகாவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். அவரை மிக அருகில் பார்க்கவும், தொட்டுப் பார்க்கவும் முண்டியடித்தனர்.
இதனால் திணறிப் போனார் ஹன்ஸிகா. பலர் அவரைக் கிள்ளினர். வேகமாக அவரைப் பிடித்து இழுத்ததால் அவர் உடலில் பல இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டது.
இதனால் அலறித் துடித்த ஹன்ஸிகாவை பக்கத்திலிருந்த பொலிசார் வந்து மீட்டனர். இதுகுறித்து ஹன்ஸிகா கூறுகையில், ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டனர்.
நல்ல வேளை பொலிசார் வந்து மீட்டனர். நிச்சயம் இனி செக்யூரிட்டியை பலப்படுத்தினால்தான் வெளியில் செல்ல முடியும் என்றார். ஏற்கெனவே சென்னையில் இதே போன்ற அனுபவத்துக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள நடிகருடன் காதலா: பாவனா மறுப்பு


மலையாள நடிகருக்கும் நடிகை பாவனாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாவனா தமிழில் “சித்திரம் பேசுதடி” படம் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தீபாவளி, ஆர்யா, அசல், ஜெயம் கொண்டான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கும் மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளைக்கும் காதல் என்று தகவல்கள் வந்துள்ளன. ராஜீவ்பிள்ளை கேரளாவில் உள்ள பிரபல கிரிக்கெட் வீரர். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பாவனா மலையாள நடிகர் அணிக்கு தூதுவராக பணியாற்றினார். அந்த அணியில் ராஜீவ் பிள்ளை முன்னணி வீரராக இருந்தார்.
அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி பாவனாவிடம் கேட்டபோது, ராஜீவ்பிள்ளையும் நானும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில்தான் சந்தித்தோம்.
அவரை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் எங்களுக்குள் காதல் இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை என்றார். ராஜீவ்பிள்ளையும் பாவனாவை காதலிக்கவில்லை என மறுத்துள்ளார்.

இனி தனுஷை வைத்து படம் இயக்க மாட்டேன்: கஸ்தூரி ராஜா


‘தனுஷை வைத்து இனி படம் இயக்க மாட்டேன்’ என்றார் கஸ்தூரி ராஜா பரபரப்பாக பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் என் மருமகள் ஐஸ்வர்யா தனுஷ் ‘3’ படம் மூலம் இயக்குனர் ஆகி இருக்கிறார்.
இப்படத்தை நான் தயாரிக்கிறேன், அவரது கணவரும் எனது மகனுமான தனுஷ் நடிக்கிறார். உதவி இயக்குனராக ஐஸ்வர்யா என்னிடம் பணியாற்றிய அனுபவம் இந்தப்படத்தில் தெரிகின்றது.
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் மார்ச் மாதம் படம் வெளியாகிறது. இந்தியில் 600 பிரின்ட் போடப்படுகிறது. தமிழில் 300 முதல் 400 பிரின்ட் போடப்படும். ‘3’ என்றால் என்ன என்கிறார்கள்.
தனுஷ், ஸ்ருதிஹாசன் இருபாத்திரம் 3வது கதாபாத்திரம் யார் என்பதுதான் 3க்கு அர்த்தம். இந்த படத்தில் ரஜினி நடிக்கவில்லை. என் இயக்கத்தில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தினேன், அதேபோல் என் பேனரில் செல்வராகவனை இயக்குனராக அறிமுகப்படுத்தினேன்.
இப்போது ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்தி உள்ளேன். புதுமுகங்களை வைத்துத்தான் நான் படம் இயக்குகிறேன். அந்த வகையில் இனி தனுஷை வைத்து இயக்க மாட்டேன். புதுமுகங்களை வைத்து அசுரகுலம் என்ற படம் இயக்குகிறேன்.
அடுத்து மலையாளத்தில் ஒரு படம் இயக்க உள்ளேன். தமிழ் கலைஞர்கள் உலகப் புகழ்பெற்றாலும் அவரை பாராட்டும் எண்ணம்மட்டும் இங்கு வருவதில்லை. தனுஷ் பாடிய ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாடலுக்கு உலகம் முழுவதும் பாராட்டு கிடைக்கிறது. ஆனால் தமிழ் கலைஞனான அவனை இங்குள்ளவர்கள் பாராட்டாதது வருத்தம் அளிக்கிறது.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

இந்தியில் ரீமேக் ஆகும் காதலில் சொதப்புவது எப்படி


“காதலில் சொதப்புவது எப்படி” திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக நாயகன் சித்தார்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கொலிவுட்டில் சித்தார்த், அமலா பால் இருவரும் இணைந்து காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.
காதலர்கள் மத்தியில் எப்படி எல்லாம் சண்டை வருகிறது, அதை எப்படி அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் இயக்குனர் பாலாஜி, இப்படத்தை இயக்கியுள்ளார்.
Y NOT STUDIOS காதலில் சொதப்புவது எப்படி படத்தை தயாரித்துள்ளது. சித்தார்த், நிரவ்ஷா ஆகியோர் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்கள்.
இந்நிலையில் காதலில் சொதப்புவது எப்படி படம் இந்தியில் ரீமேக்காக இருக்கிறது.
இது குறித்து சித்தார்த் தனது டிவிட்டரில், காதலில் சொதப்புவது எப்படி படத்தின் இந்தி உரிமைக்காக கேட்டு வருகிறார்கள். விரைவில் இந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்படும்.
Y NOT மற்றும் எனது நிறுவனமான EKATI இப்படத்தினை தயாரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்திற்காக நிரவ் ஷாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. DIGITAL CAMERA மூலம் இப்படத்தினை 35 நாட்களில் முடித்து கொடுத்து இருக்கிறார்.

சுந்தர்.சி இயக்கத்தில் ஸ்ருதிஹாசன்


சுந்தர்.சி இயக்கத்தில் நாயகி ஸ்ருதி ஹாசன் இணைகிறார்.
நாயகன் விஷால், திரு இயக்கத்தில் “சமரன்” படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா நாயகியாக நடிக்க, பாலாஜி ரியல் மீடியா சமரனை தயாரித்து வருகிறது.
சமரன் படத்தினைத் தொடர்ந்து விஷால், சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். முதன் முறையாக மூன்று வேடங்களில் நடிக்க உள்ள விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஸ்ருதிஹாசன் நடித்து வருவதால் இப்படத்தின் நாயகியாக ஸ்ருதியை ஒப்பந்தம் செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.
தான் இயக்கிவரும் “மசாலா கஃபே” படத்தை முடித்த பிறகு, மார்ச் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பை சுந்தர்.சி தொடங்க திட்டமிட்டுள்ளார்.

மென்மையான காதலை சொல்லும் லீலை திரைப்படம்


“லீலை” திரைப்படத்தில் மனதை வருடும் மென்மையான காதலை சொல்லியிருப்பதாக இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் கூறியுள்ளார்.
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவியாளராக பணியாற்றிய ஆண்ட்ரூ லூயிஸ் 'லீலை' படத்தை இயக்கியுள்ளார்.
அறிமுக இயக்குனரான ஆண்ட்ரூக்கு எஸ்.ஜே. சூர்யா உற்சாகமளித்து, 'லீலை' படத்தை எடுக்க வைத்துள்ளார் என்று திரையுலகம் கூறுகிறது.
'இது காதலும் நகைச்சுவையும் கலந்த பொழுதுபோக்கான திரைப்படம். இதில் இந்தி 'ஷைடான்' படத்தில் நடித்த ஷிவ் பண்டிட் நாயகனாக நடித்துள்ளார்.
நாயகியாக மன்சி ப்ரேக் நடித்துள்ளார். இருவரும் விளம்பரங்களில் நடித்துள்ளார்.
லீலையில் மனதை வருடும் மென்மையான காதலை சொல்லியிருக்கிறேன். இந்தப்படத்தில் சந்தானம் கலகலவென ரசிகர்களை சிரிக்க வைப்பார்.
ஷிவ் மற்றும் மன்சி இருவரும் தங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள். படத்தின் கதை மற்றும் படமாக்கப்பட்ட விதத்திலும் வித்தியாசமான அம்சங்கள் இருப்பதை படத்தை பார்த்து ரசிகர்கள் உணர்வார்கள் என்று இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் தெரிவித்துள்ளார்.
லீலை படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் அறிவித்துள்ளார்.

சசிகுமாருடன் இணையும் புகைப்பட கலைஞர்


இயக்குனர் சசிகுமாரின் தயாரிப்பில் பிரபல புகைப்பட கலைஞர் பாலுமகேந்திரா படம் ஒன்றை இயக்குகிறார்.
கொலிவுட்டில் பிரபல புகைப்பட கலைஞர் பாலு மகேந்திரா, மூடுபனி, மூன்றாம் பிறை மற்றும் வீடு ஆகிய படங்களின் வாயிலாக திரையுலகில் பிரபலமானவர்.
தற்போது இயக்குனர் சசிக்குமார் தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார்.
இயக்குனர் சசிக்குமார் தயாரிக்கும் படத்தை நான் இயக்குகிறேன். இதற்காக புது கமெராவில் சில காட்சிகளை எடுத்துள்ளேன்.
ஏழு வயது சிறுவனை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்குகிறேன். எதிர்வருகிற ஏப்ரல் அல்லது சூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
படத்தில் நடிக்கும் சிறுவன் தனது பள்ளி தேர்வுகளை எழுதி முடித்ததும் களமிறங்குகிறோம் என்று புகைப்பட கலைஞர் பாலு மகேந்திரா தெரிவித்துள்ளார்.

கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் முன்னோட்ட காட்சி


கொலிவுட்டில் அறிமுக நாயகன் ஹிருதயராஜ், நாயகி ஆதிதி நடிக்கும் கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் முன்னோட்ட காட்சி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கொலிவுட்டில் கொஞ்சம் காபி கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தை கணேஷ்வர் திரிபதி தயாரிக்க, வெங்கி இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு பாணி கல்யாண் இசையமைக்க, பிரவின் ஸ்ரீகாந்த் தொகுத்துள்ளார். படத்திற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை எத்திராஜ் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
சந்தோஷம், உற்சாகமூட்டும் ஆரவாரம், சிரிப்பு மற்றும் கலை நிகழ்ச்சி என பல்வேறு வகையான திறமைகளை ஒருங்கிணைத்த எத்திராஜ் கல்லூரியின் சிருஷ்டி 2012 கலை நிகழ்ச்சியினை பற்றி கூற வார்த்தைகளே இல்லை.
அதை போன்றே அங்கு உற்சாகமாக நடைபெற்ற கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளையும் யாராலும் மறக்க இயலாது.
இத்திரைப்படத்தின் விளம்பரங்கள் கல்லூரி வளாகத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு காபி ஷாப்பில் ஆரம்பித்தன.
காபியை போலவே நல்ல மனம்மிக்க அன்புடன், இத்திரைப்படத்தின் கருவினை போலவே அனைவரும் அன்பும் நட்பும் சூழ கொண்டாடினர். அங்கு திரையிடப்பட்ட இத்திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியை அங்குள்ள மாணவர்கள் கண்டுகளித்து நல்ல வரவேற்பளித்தனர்.
கல்லூரி மாணவ மாணவிகளை கவரும் விதமாக பன்னாட்டு காபி வகைகள் மற்றும் சாக்லேட்கள் குறைந்த விலையில் படத்தின் விளம்பரத்துடன் விற்கப்பட்டது.
இத்திரைப்படத்தின் விளம்பரங்கள் கல்லூரி மாணவ மாணவிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் திரைப்படத்தின் வெளியீட்டை தாங்கள் ஆர்வமாக எதிர்நோக்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
 
 

சண்டைக்காட்சிகளில் நடித்த பொல்லாங்கு பட நாயகி


பொல்லாங்கு திரைப்பட நாயகி நிஷா லால்வானி, தன்னுடைய பொல்லாங்கு பட அனுபவத்தை கூறியுள்ளார்.
பாலிவுட் படங்களில் நடித்துள்ள நிஷா லால்வானி, தமிழில் பொல்லாங்கு படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இந்தப்படத்திற்க்காக உயரத்திலிருந்து குதித்தும், சண்டைக்காட்சிகளிலும் நடித்த தன்னுடைய அனுபவத்தைக் கூறியுள்ளார்.
நான் இயக்குனர் மகேஷ் பட்டின் 'கல்யுக்' படத்தில் அம்ரிதா சிங்கின் மகளாக நடித்துள்ளேன். மேலும், நான் இந்தியில் நடித்த படம் ஒன்று இதுவரையில் திரைக்கு வராமல் உள்ளது.
இந்நிலையில் நாயகி கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, பொல்லாங்கு படத்தை தயாரித்துள்ளார்கள்.
இந்த படத்தில் சுமார் 100 அடி உயரத்திலிருந்து தண்ணீருக்குள் குதிக்கிற காட்சியை படத்துக்காக எடுத்துள்ளார்கள். சில காட்சிகளில் மாற்று ஆள் இல்லாமல் நடித்துள்ளேன்.
அதிரடி சண்டைக்காட்சிகளிலும் நான் நடித்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.
படத்தில் நடிக்கும்போது, எனக்கு அவ்வளவாக மொழிப்பிரச்சினை ஏற்படவில்லை. படத்தின் தலைப்பு முதல் வசனங்கள் வரை, எனக்கு விளக்கமாக படக்குழு கூறியுள்ளது என்று நிஷா தெரிவித்துள்ளார்.

ஏமிக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்த நாயகன் பிரதீக்


ஏமிஜாக்சனுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்தேன் என்று ஏக் தீவானா தா நாயகன் பிரதீக் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் பாலிவுட்டில் ஏக் தீவானா தா என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.
ஏக் தீவானா தா படத்தில் பிரதீக் நாயகனாகவும், எமி ஜாக்சன் நாயகியாகவும் இணைந்து நடித்துள்ளனர்.
இதுகுறித்து நாயகன் பிரதீக் கூறியதாவது, கெளதம் மேனனின் இயக்கத்தில், ஏக் தீவானா தா அழகான காதல் காவியமாக வந்துள்ளது.
இதில் நான் சினிமாவில் இயக்குனராகத் துடிக்கும் மகாராஷ்டிர இளைஞனாக நடித்துள்ளேன். எமி ஜாக்ஸன், மலையாளி கிறிஸ்டியன் பெண்ணாக நடித்துள்ளார்.
இது யதார்த்தமான காதல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக அமைந்துள்ளது.
படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் மனம் விட்டு பேசி, பல விடயங்களை பகிர்ந்து கொண்டோம். மற்றபடி எங்களுக்குள் ஒன்றும் கிடையாது.
ஏமி ஜாக்சன் வெளிநாட்டு பெண் என்பதால், நான் அவருக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்துள்ளேன் என்று நாயகன் கூறியுள்ளார்.