வியாழன், 23 பிப்ரவரி, 2012

சண்டைக்காட்சிகளில் நடித்த பொல்லாங்கு பட நாயகி


பொல்லாங்கு திரைப்பட நாயகி நிஷா லால்வானி, தன்னுடைய பொல்லாங்கு பட அனுபவத்தை கூறியுள்ளார்.
பாலிவுட் படங்களில் நடித்துள்ள நிஷா லால்வானி, தமிழில் பொல்லாங்கு படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இந்தப்படத்திற்க்காக உயரத்திலிருந்து குதித்தும், சண்டைக்காட்சிகளிலும் நடித்த தன்னுடைய அனுபவத்தைக் கூறியுள்ளார்.
நான் இயக்குனர் மகேஷ் பட்டின் 'கல்யுக்' படத்தில் அம்ரிதா சிங்கின் மகளாக நடித்துள்ளேன். மேலும், நான் இந்தியில் நடித்த படம் ஒன்று இதுவரையில் திரைக்கு வராமல் உள்ளது.
இந்நிலையில் நாயகி கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, பொல்லாங்கு படத்தை தயாரித்துள்ளார்கள்.
இந்த படத்தில் சுமார் 100 அடி உயரத்திலிருந்து தண்ணீருக்குள் குதிக்கிற காட்சியை படத்துக்காக எடுத்துள்ளார்கள். சில காட்சிகளில் மாற்று ஆள் இல்லாமல் நடித்துள்ளேன்.
அதிரடி சண்டைக்காட்சிகளிலும் நான் நடித்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.
படத்தில் நடிக்கும்போது, எனக்கு அவ்வளவாக மொழிப்பிரச்சினை ஏற்படவில்லை. படத்தின் தலைப்பு முதல் வசனங்கள் வரை, எனக்கு விளக்கமாக படக்குழு கூறியுள்ளது என்று நிஷா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக