சனி, 25 பிப்ரவரி, 2012

நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆசைப்படும் ஸ்ரேயா


தெலுங்கு, ஆங்கில படங்களில் ஆர்வமாக நடித்து வரும் ஸ்ரேயா தற்போது நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.  
கவர்ச்சி ஆடையில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சர்ச்சைகளிலும், வழக்குகளிலும் சந்தித்த ஸ்ரேயா தற்போது அவற்றிலிருந்து விடுபட்டிருக்கிறார்.
மேலும் தெலுங்கு, ஆங்கில படங்களில் ஆர்வமாக நடித்து வரும் இவர் ஐதராபாத்தில் பேட்டியளிக்கையில், காலம் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும்.
நேற்று போல் இன்று இருப்பது இல்லை. இன்று போல் நாளை இருப்பது இல்லை. என்னை பொறுத்தவரை, தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் திருப்தியான வேடங்களில் நடித்து முடித்து விட்டேன்.
ஆனாலும் முழுக்க முழுக்க நகைச்சுவை வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறேன். எனக்கு பிடிக்காதது திகில் கதைகள் என்றும் திகில் படங்களை நான் பார்ப்பதே இல்லை.
மேலும் அது போன்ற படங்களில் நடிக்கவும் மாட்டேன். பணம் கொடுத்து பார்க்க வரும் ரசிகர்களுக்கு இது போன்ற பயங்கர கதைகளை காட்டுவது உகந்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக