வியாழன், 23 பிப்ரவரி, 2012

மீண்டும் இணையும் தோழர்கள்


பசங்க திரைப்படத்திற்கு அடுத்து பாண்டிராஜ், சசிகுமார் மீண்டும் இணைகின்றனர்.
கொலிவுட்டில் இயக்குனர் சசிகுமாரின் நண்பர்கள் என்றால் சமுத்திரகனி, பாண்டிராஜ் இருவரையும் சொல்லலாம்.
சசிகுமார், பாண்டிராஜ் கூட்டணியில் பசங்க திரைப்படம் தேசிய விருது பெற்றது.
பசங்க திரைப்படத்தில் பாண்டிராஜ், கதை மற்றும் வசனம் எழுதியதற்காக தேசிய விருது வாங்கினார்.
இந்நிலையில் சசிகுமார் புதிய திரைப்படமொன்றை தயாரிக்க உள்ளார். மேலும் ஒரு சிறு வேடத்தில் நடிக்கவும் உள்ளார்.
இப்படத்திற்கு இயக்குனர் பாண்டிராஜ் கதை, வசனம் எழுதுகிறார். ஏற்கனவே பசங்க திரைப்படத்தின் மூலம் வெற்றிக்கூட்டணி என்று பெயர் வாங்கிய இவர்கள் மீண்டும் இணைகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக