திங்கள், 13 பிப்ரவரி, 2012

திருமணத்திற்கு பிந்தைய நடிப்பு பற்றி முடிவு செய்யவில்லை: சினேகா


திருமணத்திற்கு பின்பு நடிப்பதைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று நாயகி சினேகா தெரிவித்துள்ளார்.
திரையுலக நட்சத்திரங்களான பிரசன்னாவும், சினேகாவும் திருமணத்திற்கு தயாராகிவருகிறார்கள்.
தற்போது நாயகி சினேகா, விடியல் மற்றும் முரட்டுக்காளை என்ற இரு தமிழ்திரைப்படங்களில் நடித்துவருகிறார்.
மேலும் ஜோசட்டன்டே என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
அநேகமாக இன்னும் இரண்டு மாதங்களில் இந்த திரைப்படங்களை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையானிலிருந்து விலகியது பற்றி சினேகா, என்னுடைய திகதிகள் பிரச்சினையால் கோச்சடையானிலிருந்து விலகினேன்.
திருமணத்திற்கு பின்பு சினிமாவில் நடிப்பீர்களா? என்ற ஊடகத்தினரின் கேள்விக்கு, அதுபற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக