சனி, 11 பிப்ரவரி, 2012

பொய்யான செய்திகளுக்கு பதிலளித்துள்ள நாயகி தமன்னா


என் மீது தெலுங்கு தயாரிப்பாளர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று வெளியான செய்தி உண்மையில்லை என்று நாயகி தமன்னா கூறியுள்ளார்.
கொலிவுட்டில் முன்னணி நாயகியாக திகழ்ந்த தமன்னா தற்போது தெலுங்கில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
தெலுங்கில் ராம்சரன் தேஜா ஜோடியாக ராச்சா, பிரபாஸ் ஜோடியாக ரிபெல், ராம் ஜோடியாக எந்துகந்தே பிரேமந்தா ஆகிய படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் தமன்னா மீது தெலுங்கு தயாரிப்பாளர்கள் கடுமையான கோபத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து நாயகி தமன்னா கூறியதாவது, ஒப்பந்தம் செய்யப்பட்ட திரைப்படங்களை நிறைவு செய்யாமல், மற்ற திரைப்படங்களில் நடிக்கிறேன் என்று வெளியான செய்தி உண்மையில்லை.
மேலும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் என் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று வெளியான செய்தியும் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாயகன் மகேஷ் பாபுவுடன் நடிக்க யோசித்து வருவதாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகே மற்ற திரைப்படங்களில் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக