புதன், 29 பிப்ரவரி, 2012

விஷாலுக்கு பொருத்தமான நாயகிகளைத் தேடும் சுந்தர்.சி


விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு பொருத்தமான நாயகிகளை இயக்குனர் சுந்தர்.சி தேடி வருகிறார்.
கொலிவுட்டில் மசாலா கஃபே படத்தை இயக்கும் சுந்தர்.சி, அடுத்து விஷால் மூன்று வேடங்களில் நடிக்கும் படத்தை இயக்கத்திட்டமிட்டுள்ளார்.
இப்போது விஷாலுக்கு பொருத்தமான நாயகிகளை சுந்தர்.சி, மும்முரமாக தேடி வருகிறார்.
இதுகுறித்து இயக்குனர் சுந்தர்.சி கூறியதாவது, விஷால் மூன்று வேடங்களில் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளில் வெளியிட உள்ளோம்.
மூன்று வேடங்களில் விஷால் நடிக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெறும் என்று உறுதியாக நம்பிக்கை வைத்துள்ளேன்.
இந்திய திரையுலகமே விஷாலின் மூன்று வேடங்களை பார்த்து வியக்குமளவுக்கு, இதுவரை ரசிகர்கள் காணாத வேடங்களில் விஷாலை இந்தப்படத்தில் பார்க்கலாம்.
இப்போது விஷாலுக்கு பொருத்தமான நாயகிகளை தேடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக