![]() |
லலிதா நீலகண்டனின் பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி, பல படங்களைத் தயாரித்துள்ளனர். அவற்றை பெரும்பாலும் லலிதாவின் மருமகன் எஸ்.ஏ சந்திரசேகரனே இயக்கினார்.![]() ஷோபாவின் மகன் நடிகர் விஜய். ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்த். பாட்டி மீது விஜய் மிகுந்த பாசமாக இருப்பார். மகள் ஷோபா-மருமகன் சந்திரசேரனுடன் வசித்து வந்த லலிதா நீலகண்டனுக்கு நேற்று முன்தினம் நெஞ்சுவலி வந்தது. அவரை விஜயா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் நேற்று காலை அவர் மரணமடைந்தார். அவருக்கு நுங்கம்பாக்கம் தெரஸா தேவ ஆலயத்தில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. மாலையில் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. லலிதா நீலகண்டனுக்கு விஜய் ரசிகர்கள், திரையுலகினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். |
வியாழன், 16 பிப்ரவரி, 2012
விஜய் பாட்டி லலிதா நீலகண்டன் மரணம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக