![]() |
ஹாலிவுட்டில் 2008ல் வெளியாகி வெற்றி பெற்ற ஜர்னி டூ சென்டர் ஆப் இயர் படத்தின் இரண்டாம் பாகமான ஜெர்னி-2 படம் தமிழில் ருத்ரபூமி என்ற பெயரில் வெளியிடப்படுகிறது.![]() அங்கு பெரிய ருத்ரபூமி தெரிகிறது. இயற்கைக்கு மாறான விலங்குகள், எரிமலைகள், தங்க மலைகள், கொட்டும் தங்க மழை, அசுரப் பறவைகள், ராட்சத தேனீக்களை கண்டு மிரள்கின்றனர். அவற்றிடம் இருந்து தப்பி கடலுக்கடியில் உள்ள மர்ம தீவில் வசிக்கும் ஜான் ஆண்டர்சன் தாத்தாவை சந்திக்கின்றனர். அந்த தாத்தா விசித்திர உலகம் நான்கு நாளில் ருத்ர பூமியாக மாறி உலகை அழித்து விடும் என்ற அதிர்ச்சி தகவலை சொல்கிறார். அந்த ஆபத்தில் இருந்து மூவரும் எப்படி தப்புகிறார்கள் என்பது இறுதிக்காட்சி. ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தை ராம நாராயணனின் அழகர் பிலிம்சும், வார்னர் பிரதர்சும் இணைந்து வருகிற நாளை தமிழகம் முழுவதும் வெளியிடுகின்றனர். |
வியாழன், 9 பிப்ரவரி, 2012
நாளை திரைக்கு வரும் ருத்ரபூமி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக