வருகிற 24ம் திகதி அரவான் திரைப்படம், ரசிகர்களுக்கு விருந்தாக திரையரங்குகளுக்கு வருகிறது. |
கொலிவுட்டில் வெயில், அங்காடித் தெரு போன்ற திரைப்படங்கள் மூலம் வசந்தபாலன் பலரது பாராட்டுகளையும், விருதுகளையும் வென்றார். வசந்தபாலன் இயக்கத்தில் ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி, பரத், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள அரவான் திரைக்கு வர உள்ளது. பாடகர் கார்த்திக் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, அரவான் திரைப்படத்தை தயாரித்துள்ளார். சு.வெங்கடேசன் எழுதிய “காவல் கோட்டம்” நாவலிருந்து ஒரு சிறு பகுதியை வசந்தபாலன் படமாக உருவாக்கியுள்ளார். அரவான் திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் படத்தினை பார்த்த தணிக்கை அதிகாரிகள் வசந்தபாலனை பாராட்டியுள்ளார்கள். படத்திற்கு U சான்றிதழ் அளித்துள்ளார்கள். வருகிற 24ம் திகதி அரவான் திரையுலக ரசிகர்களுக்கு விருந்தாக திரையிடப்பட உள்ளது. |
வியாழன், 16 பிப்ரவரி, 2012
24ம் திகதி திரைக்கு வரும் அரவான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக