வியாழன், 23 பிப்ரவரி, 2012

சசிகுமாருடன் இணையும் புகைப்பட கலைஞர்


இயக்குனர் சசிகுமாரின் தயாரிப்பில் பிரபல புகைப்பட கலைஞர் பாலுமகேந்திரா படம் ஒன்றை இயக்குகிறார்.
கொலிவுட்டில் பிரபல புகைப்பட கலைஞர் பாலு மகேந்திரா, மூடுபனி, மூன்றாம் பிறை மற்றும் வீடு ஆகிய படங்களின் வாயிலாக திரையுலகில் பிரபலமானவர்.
தற்போது இயக்குனர் சசிக்குமார் தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார்.
இயக்குனர் சசிக்குமார் தயாரிக்கும் படத்தை நான் இயக்குகிறேன். இதற்காக புது கமெராவில் சில காட்சிகளை எடுத்துள்ளேன்.
ஏழு வயது சிறுவனை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்குகிறேன். எதிர்வருகிற ஏப்ரல் அல்லது சூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
படத்தில் நடிக்கும் சிறுவன் தனது பள்ளி தேர்வுகளை எழுதி முடித்ததும் களமிறங்குகிறோம் என்று புகைப்பட கலைஞர் பாலு மகேந்திரா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக