திங்கள், 13 பிப்ரவரி, 2012

தன் மீதுள்ள புகாருக்கு பதிலளித்த தீபிகா படுகோன்


கோச்சடையான் திரைப்படத்தில் நடிப்பதற்காக ரமேஷ் தாரணி படத்திலிருந்து விலகவில்லை என்று தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர நடிகை தீபிகா படுகோன், ரேஸ்-2 என்ற தன்னுடைய படத்திலிருந்து விலகிவிட்டார் என்று ரமேஷ்தாரணி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை ரமேஷ் தாரணி, இந்தி சினிமா கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தார்.
மேலும் இதுகுறித்து தீபிகாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையானில் நடிப்பதற்காகவே தீபிகா படுகோன் ரேஸ் 2 படத்திலிருந்து விலகியதாகவும் தகவல் வெளியாகின.
இதுகுறித்து நாயகி தீபிகா படுகோன், ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடிப்பதற்காக ரேஸ்-2 படத்தில் இருந்து நான் விலகவில்லை.
ரஜினியுடன் நடிக்க ரொம்ப நாளைக்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. ரேஸ்-2 படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்து விட்டு படப்பிடிப்பு நடத்தாமல் 1 1/2 வருடம் தாமதம் செய்தனர்.
இதனால் என்னுடைய திகதிகள் விரயமானது. வேறு படங்களுக்கும் ஒப்பந்தமாகி உள்ளதால் பிரச்சினைகள் எழுந்தது.
எனவே ரேஸ் 2 படத்திலிருந்து விலகினேன். என்னிடம் நடிகர் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது. நான் விரைவில் பதில் அனுப்புவேன் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக