வியாழன், 16 பிப்ரவரி, 2012

ரஜினிகாந்த் மீது மரியாதை வைத்துள்ளேன்: ஜாக்கி ஷெராப்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது மரியாதை வைத்துள்ளேன் என்று பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் கூறியுள்ளார்.
பாலிவுட் திரையுலக நாயகன் ஜாக்கி ஷெராப், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பல ஆண்டுகளுக்கு முன்பு உத்தர் தக்ஷிண் என்ற இந்திப் படத்தில் நடித்தார்.
தமிழில் முதல்முறையாக ஆரண்ய காண்டம் படத்தில் நடித்தார். தற்போது ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, புகைப்படப் பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.
கோச்சடையானில் நடிப்பது குறித்து ஜாக்கி ஷெராப் கூறுகையில், கோச்சடையானில் நடிக்குமாறு சௌந்தர்யா கேட்டுக் கொண்டார்.
என்னுடைய நெருங்கிய நண்பரான ரஜினி, சினிமாவில் ஒரு உன்னதமான அடையாளமாக திகழ்கிறார்.
அவர் மீது மதிப்பு வைத்துள்ளேன். அவர் கேட்டால் நான் எதையும் மறுக்க மாட்டேன். ரஜினிக்காக எதையும் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
கோச்சடையான் திரைக்கதையை சௌந்தர்யா மிக அருமையாக உருவாக்கி உள்ளார். எனது கதாப்பாத்திரமும் வலுவானது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக