சனி, 25 பிப்ரவரி, 2012

மலையாள நடிகருடன் காதலா: பாவனா மறுப்பு


மலையாள நடிகருக்கும் நடிகை பாவனாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாவனா தமிழில் “சித்திரம் பேசுதடி” படம் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தீபாவளி, ஆர்யா, அசல், ஜெயம் கொண்டான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கும் மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளைக்கும் காதல் என்று தகவல்கள் வந்துள்ளன. ராஜீவ்பிள்ளை கேரளாவில் உள்ள பிரபல கிரிக்கெட் வீரர். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பாவனா மலையாள நடிகர் அணிக்கு தூதுவராக பணியாற்றினார். அந்த அணியில் ராஜீவ் பிள்ளை முன்னணி வீரராக இருந்தார்.
அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி பாவனாவிடம் கேட்டபோது, ராஜீவ்பிள்ளையும் நானும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில்தான் சந்தித்தோம்.
அவரை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் எங்களுக்குள் காதல் இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை என்றார். ராஜீவ்பிள்ளையும் பாவனாவை காதலிக்கவில்லை என மறுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக