![]() |
கொலிவுட்டில் நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும் படங்களில் நாயகியாக நடித்த அனன்யாவுக்கும் ஆஞ்சநேயன் என்பவருக்கும் கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.![]() இதையடுத்து அனன்யாவின் தந்தை கோபால கிருஷ்ணன் கேரளாவில் உள்ள பெரும்பாவூர் பொலிசில் புகார் அளித்தார். ஆனால் ஆஞ்சநேயன் இன்னொரு திருமணம் செய்திருந்தாலும் அவரை மணமுடிக்க அனன்யா பிடிவாதமாக இருந்தார். இதனால் அவரை அவர் பெற்றோர் வீட்டுச்சிறையில் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் பரபரப்பு பற்றி, பத்திரிக்கையாளர்களிடத்தில் அனன்யா கூறியதாவது, இது முழுக்க முழுக்க கட்டுக் கதை. எனது திருமணத்தை பிடிக்காதவர்கள் கூறுகின்ற பொய் என்று தெரிவித்துள்ளார். மேலும் என்னை யாரும் சிறை வைக்கவில்லை. எனது வீட்டில் சுதந்திரமாகத்தான் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். |
வியாழன், 16 பிப்ரவரி, 2012
நான் சுதந்திரமாக இருக்கிறேன்: அனன்யா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக