சனி, 18 பிப்ரவரி, 2012

ரசிகர்களிடம் சிக்கித் தவித்த ஹன்சிகா


கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நாயகி ஹன்சிகா மோத்வானி கலந்து கொண்டார்.
இவருடன் அமலா பால், நவ்யா நாயர் போன்றோரும் சென்றிருந்தனர். இவர்களை காண்பதற்கு மாணவர்களும், ரசிகர்களும் திரளாக கூடியிருந்தனர்.
இக்கூட்டத்தில் சிக்கிக் கொண்ட ஹன்சிகாவை ரசிகர்கள் சுற்றிவளைத்து ரகளை செய்ததில் அவருக்கு கையில் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.
பின்பு பொலிசாரும், பாதுகாவலர்களும் விரைந்து வந்து ரசிகர்கள் பிடியிலிருந்து ஹன்சிகாவை மீட்டனர்.
மேலும் பாதுகாப்பான முறையில் காரில் அழைத்து சென்று விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஹன்சிகா கூறுகையில், என்னை நோக்கி வந்த ரசிகர்கள் கூட்டத்தினை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி, என்னை பாதுகாத்தனர்.
அவர்களை ஒரு போதும் மறக்க மாட்டேன் என்று தெரிவித்த ஹன்சிகா, அவர்களுக்கு தன்னுடைய நன்றியையும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக