வியாழன், 16 பிப்ரவரி, 2012

தெலுங்கில் உருவாகும் ரேணிகுண்டா


கொலிவுட்டில் வெற்றியடைந்த ரேணிகுண்டா திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
கொலிவுட்டில் கடந்த 2009ம் ஆண்டு தமிழக-ஆந்திரா எல்லைப் பகுதியை மையப்படுத்தி ரேணிகுண்டா திரைப்படம் வெளியானது.
இப்படம் தமிழகத்திலும் ஆந்திராவிலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ரேணிகுண்டாவில் புதுமுகம் ஜானி நாயகனாகவும், நாயகியாக சனுஜாவும் நடித்திருந்தனர். பன்னீர்செல்வம் இயக்கியிருந்தார்.
ஆந்திராவில் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் ஆந்திராவில் இப்படம் வெளியிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக