ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

வலுவான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா


வலுவான கதாப்பாத்திரம் உள்ள திரைப்படங்களில் நடிப்பதாக நாயகி பூர்ணா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் பூர்ணா, தற்போது கொலிவுட் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பதாக கூறியுள்ளார்.
அழுத்தமான கதாபாத்திரங்கள் உள்ள படங்களை தெரிவு செய்வதாக நாயகி பூர்ணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாயகி பூர்ணா கூறியதாவது, நான் இப்போது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்துள்ளேன்.
கருவாச்சி என்ற படத்தில் கிராமத்து பெண்ணாக வருகிறேன். இதில் எனக்கு வழுவான பாத்திரம் கொடுத்து நடிக்க வைத்துள்ளார்கள்.
இதையடுத்து மெய் அழகி என்ற திரைப்படத்தின் கதையே என் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து சுழல்கிறது.
மேலும் வேஷம் என்ற திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் எனக்கு பலம்வாய்ந்த கதாப்பாத்திரம் கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக