வியாழன், 19 ஜனவரி, 2012

விரைவில் ஹிந்தியில் 3 திரைப்படம்


வொய் திஸ் கொல வெறி பாடல் மூலம் பிரபலமடைந்துள்ள 3 திரைப்படம், தற்போது ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது.
வொய் திஸ் கொல வெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.
இதனையடுத்து இப்பாடல் இடம்பெற்றுள்ள 3 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலைவெறி பாடல் பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை கவர்ந்துள்ளது.
இதனையடுத்து இத்திரைப்படத்தை ஹிந்தி மொழியிலும் மறு ஒளிப்பதிவு செய்ய வேண்டுமென, இப்படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா தனுஷிற்கு அபிஷேக் பச்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஐஸ்வர்யா தனுஷ் கூறுகையில், அபிஷேக் பச்சனின் கோரிக்கையை ஏற்று இப்படத்தை ஹிந்தியில் இயக்கவுள்ளேன்.
இயக்குனராகி சிறிது காலத்திலேயே பாலிவுட்டில் அடியெடுத்து வைப்பது சந்தோஷமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக