திங்கள், 30 ஜனவரி, 2012

விலையுயர்ந்த நெக்லஸை முன்பதிவு செய்துள்ள கரீனா


நடிகை கரீனா கபூர், தனது திருமணத்திற்காக ரூ.40 லட்சம் மதிப்பில் விலையுர்ந்த நெக்லஸ் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார்.
பாலிவுட்டின் நீண்டநாள் காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சைப் அலிகானும், கரீனா கபூரும்.
கடந்த வருடமே இவர்கள் திருமணம் செய்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர், ஆனால் எதிர்பாரா விதமாக சைப் அலிகானின் அப்பா மன்சூர் அலிகான் பட்டோடி இறந்து போனதால் திருமணம் தள்ளிபோனது.
இந்நிலையில் மார்ச் மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். சைப் அலிகான் தன்னுடைய முதல்பட தயாரிப்பான ஏஜெண்டு வினோத் திரைப்படத்தின் வெளியீட்டு வேலையில் மும்முமரமாக உள்ளார்.
இந்தபடம் வெளியான பின்பு இவர்களது திருமணம் ஆடம்பரமாய் நடைபெறவுள்ளது.
திருமணத்திற்காக நடிகை கரீனா கபூர் விலை உயர்ந்த ரத்தின கற்கள் பொறிக்கப்பட்ட 400 கிராம் எடை கொண்ட நெக்லசிற்கு முன்பதிவு கொடுத்துள்ளார்.
இதன் விலை ரூ.40 லட்சம் என்று கூறப்படுகிறது. அதேபோல் சைப்புக்கும் விலையுர்ந்த மோதிரம் ஒன்றை பரிசாக அளிக்க கரீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக