வியாழன், 19 ஜனவரி, 2012

காதல் நெஞ்சங்களை இணைத்து வைத்த அமலா பால்


பிரிந்த காதல் ஜோடிகளை சேர்த்து வைத்துள்ளதாக நடிகை அமலா பால் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் அறிமுக இயக்குனர் இயக்கும் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நாயகன் சித்தார்த் உடன் அமலா பால் நடிக்கிறார்.
நாயகி அமலா பால் பிரிந்த காதல் நெஞ்சங்களை இணைத்து வைத்ததாக தன்னுடைய அனுபவத்தை கூறியுள்ளார்.
நான் நடித்த வேட்டை திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடிக்கிறேன்.
எனக்கு தனிப்பட்ட முறையில் காதல் அனுபவம் இல்லை. ஆனால் என் நட்பு வட்டாரத்தில் பிரிந்த காதல் ஜோடிகளை இணைத்து வைத்துள்ளேன்.
காதலிக்கும் போது சண்டை போட்டு காதல் ஜோடி பிரிந்து விடுவார்கள். இப்படி பிரிந்து விட்டார்களே என்று நான் வருத்தப்பட்டுள்ளேன்.
பின்பு அவர்களிடம் சமாதானமாக பேசி பிரிந்த காதலர்களை சேர்த்து வைத்துள்ளேன் என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக