செவ்வாய், 3 ஜனவரி, 2012

வித்யாபாலான் சிறந்த நடிகையாக தெரிவு


பாலிவுட் நாயகி வித்யாபாலன் டர்டி பிக்சர்ஸ் திரைப்படத்திற்காக சிறந்த நடிகையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் தற்கொலை செய்து கொண்ட பழைய கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை டர்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் பாலிவுட்டில் படமானது. இப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மீண்டு பின்னர் திரையிடப்பட்டது.
மேலும் சில்க் ஸ்மிதாவின் அண்ணன், இப்படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சில்க் ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்த வித்யாபாலன் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் நீதிமன்றம் படத்துக்கு தடைவிதிக்காததால் இந்தியா முழுவதும் இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது.
தற்போது இதில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். டர்டி பிக்சர்ஸ் படத்துக்கும் சிறந்த படத்துக்கான விருது கிடைக்கிறது. நேஷனல் மீடியா நெட்வொர்க் அமைப்பு வருகிற 21-ந் திகதி மும்பையில் விழா நடத்தி இவ்விருதுகளை வழங்க உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக