திங்கள், 12 டிசம்பர், 2011

இஷ்டம் திரைப்படத்திற்க்கு பிறகு மீண்டும் தமிழில் நிஷா அகர்வால் நடிக்கிறார்


தெலுங்கு திரைப்பட நாயகியான நிஷா அகர்வால் தமிழில் இஷ்டம் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நாயகன் விமலுடன் இணைந்து இஷ்டம் திரைப்படத்தில் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் நாயகியாக நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் பாடல் காட்சிகளை படமாக்கியதற்கு பிறகு திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
நான் தமிழில் இஷ்டம் திரைப்படத்துக்கு பிறகு வேறு ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளேன். அதைப்பற்றி இப்போது எதுவும் விரிவாக பேச எனக்கு அனுமதி இல்லை. எதிர்வருகிற சனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
தற்பொழுது இந்திய மாநிலமான ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் நான் நடித்த சோலோ தெலுங்கு திரைப்படம் சம்பந்தமாக வேலையாக இருக்கிறேன் என்று நிஷா அகர்வால் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக