வியாழன், 29 டிசம்பர், 2011

இருநாட்டு பிரதமர்களுடன் நடிகர் தனுஷ் விருந்தில் பங்கேற்பு


தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வைத்த விருந்தில் கலந்து கொண்டார்.
தமிழ் திரையுலகில் 3 திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் பாடிய why this kolaveri di பாடலின் புகழ் நாளுக்கு நாள் பரவி வருகிறது.
ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் நடிகர் தனுஷை சிறப்பு விருந்தினராக பிரதமர் மன்மோகன் சிங் அழைத்திருந்தார். இந்நிலையில் நடிகர் தனுஷ், நேற்று மாலை புதுடெல்லியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டார்.
மேலும் ஜப்பானில் தனுஷின் மாமனார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் ஜப்பானில் திரையிடப்பட்டு அமோக வெற்றி பெற்றது.
தற்போது ஜப்பானில் மருமகன் தனுஷின் புகழும் பரவி வருகிறது. ஜப்பான் இரவு விடுதிகளில் why this kolaveri di பாடல் பாடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக