திங்கள், 19 டிசம்பர், 2011

படத்திற்காக கோடிக்கணக்கில் கறுப்பு பணத்தை அச்சடிக்கும் இயக்குனர்


கருப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் தொழிலதிபரிடம் இருந்து பணத்தை 4 மாணவர்கள் கொள்ளையடிக்கும் கதை “10 ஆயிரம் கோடி” என்ற பெயரில் படமாகிறது.
இந்த படத்துக்காக கோடிக்கணக்கில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கிறார் இயக்குனர்.
10 ஆயிரம் கோடி என்ற படத்தை இயக்கும் வி.சீனிவாசன் சுந்தர் கூறியதாவது: நகை, பணம் என 10 கோடி ரூபாய் அளவுக்கு கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார் ஒரு பெண் தொழிலதிபர். அவை அனைத்தையும் 4 மாணவர்கள் கொள்ளை அடித்துவிட்டு ஊரைவிட்டு தப்பிக்கின்றனர்.
அவர்களை பிடிக்க அடியாட்களை ஏவுகிறார் தொழிலதிபர். மற்றொரு பக்கம் காவல்துறையினரும் துரத்துகின்றனர். அவர்களை பிடிக்க முடிகிறதா என்பது கதை.
துருவ் கதாநாயகனாகவும், மடால்ஷா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர் தம்பிக்கு இந்த ஊரு படத்தில் நடித்தவர். சிஐடியாக விவேக் நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் பல்ஜித் கவுர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் புதுச்சேரியில் நடந்தது. “படிச்சி படிச்சி முடிச்சி முடிச்சி கிழிச்சி கிழிச்சி” என்ற பாடல் காட்சியில் துருவ், மடால்ஷா, தியாகு நடித்தனர். இப்படத்துக்காக போலி ரூபாய் நோட்டுகள், நகைகளை தயார் செய்ய வேண்டி உள்ளது.
இதற்காக கலை இயக்குனர் விஜய் ஆனந்துடன் பேசி வருகிறேன். படப்பிடிப்பிற்காக கோடிக்கணக்கில் போலி ரூபாய் நோட்டு தயாரிக்கப்படும்.
படப்பிடிப்பு முடிந்தவுடன் அவற்றை அழித்துவிடுவோம். கோவா, மும்பையில் படப்பிடிப்பு நடக்கிறது. அதற்கான இடத்தின் தெரிவு முடிந்தது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக