சனி, 31 டிசம்பர், 2011

தான் படித்த பள்ளியை சீரமைக்க நன்கொடை அளித்துள்ள ரஜினி


பெங்களூரில் தான் படித்த பள்ளியை சீரமைக்கும் பணிக்காக 25 லட்சம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார் நடிகர் ரஜினி காந்த்.
பெங்களூரில் உள்ள ஓர் பள்ளியில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1954 முதல் 1959 வரை கல்வி கற்றார். இந்த பள்ளியில் தற்போது 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பழமையான இந்த பள்ளியின் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.மேலும் இந்தப் பள்ளியின் 3,500 அடி நீள சுற்றுச்சுவர் எந்த நேரத்திலும் இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது.
வகுப்பறையில் மின்சார வசதி கிடையாது, குடி தண்ணீர் குழாய் உடைந்துள்ளது, கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை.இதனால் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இதனிடையே இப்பள்ளியின் கட்டுமான பணிகளுக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு கர்நாடக மாநில சேவா சமிதி கோரிக்கை விடுத்தது.
இதை தொடர்ந்து ரூ.25 லட்சம் நன்கொடை அளிக்க ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டுள்ளார். கட்டுமானப்பணிகள் தொடங்கியவுடன் இந்த தொகையை அனுப்பி வைப்பதாக ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக