திங்கள், 19 டிசம்பர், 2011

நான்கு நாயகன்களை இயக்க விருப்பம் தெரிவித்த வெங்கட் பிரபு


தமிழ் திரையுலகில் நான்கு முன்னணி கதாநாயகன்களை வைத்து இயக்கப் போவதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, விஷால் ஆகிய நான்கு முன்னணி நடிகர்களும் தங்களது திகதிகளை திரைப்பட நிறுவனங்களுக்கு கொடுத்து மும்பரமாக நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் லிங்கு சாமியின் வேட்டை திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, விஷால் ஆகிய நான்கு நாயகன்களை பார்த்ததும் அதிரடியாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது புதிய திரைப்படத்தில் இந்த நான்கு பேரையும் நடிக்க வைப்பதாக தெரிவித்துள்ளார்.
உடனே விழாவில் அமர்ந்திருந்த திரையுலக பிரபலங்களுக்கு ஆச்சரியத்துடன் கூடிய சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் கிடைத்தால் இந்தப்படத்தை இயக்க தயாராவேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் ஜீவா, நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். இந்தப்படத்தை எப்போது எடுப்பார்கள் என்று தெரியவில்லை. எங்கள் நான்கு பேருக்கும் எப்போது திகதிகள் ஒத்து வருமோ அப்போது சேர்ந்து நடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக