வியாழன், 29 டிசம்பர், 2011

பூக்கடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பசுபதி


இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பூக்கடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்போடு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் பசுபதி. ஆனால் வெகு விரைவாக தமிழ் சினிமாவில் அடையாளம் தெரியாமல் போனார் அவர்.
நல்லவேளையாக அரவான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பசுபதி. இந்த நேரத்தில்தான் இன்னொரு நல்ல தகவலும் வந்திருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் பசுபதியை தனது அலுவலகத்திற்கு அழைத்தாராம் இயக்குனர் மணிரத்னம். தற்போது இயக்கவிருக்கும் பூக்கடை படத்தில் முக்கிய கதாபாத்திரம் இருப்பதாகவும், அதில் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம்.
இந்தத் தகவலையடுத்து பலரும் பசுபதியை கைபேசியில் அழைத்து உண்மையா என கேட்கிறார்களாம், பசுபதியும் அதே பிரமிப்புடன் உண்மையா என திருப்பி கேட்கிறாராம்.
இநதத் தகவலை வெளியில் எவரிடமும் கூறக்கூடாது என்று இயக்குனர் மணிரத்னம் கேட்டுக்கொண்டதால் பசுபதி இந்த விஷயத்தை மறுக்கிறார் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக