சனி, 31 டிசம்பர், 2011

தமிழ் சினிமாவில் மீண்டும் நமீதா


தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டை விட்டே சில காலம் ஒதுங்கியிருந்த நடிகை நமீதா தற்போது மீண்டும் தமிழ்நாட்டிலேயே குடியேறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா. கோடம்பாக்கத்தில் நிறைய படங்களில் நடித்து வந்ததால் சென்னையிலேயே தனியாக வீடு வாங்கி குடியேறி, பல படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் கொலிவுட்டில் அவருக்கு திடீரென ஏற்பட்ட சரிவு காரணமாக சென்னை வீட்டை காலி செய்து விட்டு, தனது சொந்த ஊருக்கே திரும்பி சென்று விட்டார்.
அவ்வப்போது தமிழ்நாட்டில் கடைகள் திறப்பு விழா, சினி விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
கடந்த பல மாதங்களாக சொந்த ஊரில் தங்கி வந்த நமீதா இப்போது மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கே திரும்பிவிட்டார்.
சென்னையில் முன்பு நுங்கம்பாக்கத்தில் தங்கியிருந்த அவருடைய பழைய வீட்டுக்கே குடிவந்து விட்டார்.
மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கும் தீவிர முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக