சனி, 31 டிசம்பர், 2011

எடிஷன் பெயரில் சினிமா கலைஞர்களுக்கு விருது


எடிசன் விருதளிப்பு விழா வரும் பிப்ரவரி மாதம் 12ம் திகதி ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக திரைத்துறையினருக்காக எடிசன் பெயரில் சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
2011-ம் ஆண்டு ஜனவரி 1-ம் திகதி முதல் டிசம்பர் 23ம் திகதி வரை தமிழில் வெளிவந்த திரைப்படங்களில் உள்ள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என அனைத்து துறையினருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இவ்விருதை தேர்ந்தெடுக்க உலக தமிழர்கள் ஓன்லைன் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.edisonawards.in என்ற இணையத்தளத்தின் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்களின் yahoo group, facebook  மூலமும் ஒரு கோடி இமெயில் மூலமும், நியுஸ் லெட்டர் மூலமும் அனுப்பப்பட்டு ஓன்லைன் வாக்கு பெறப்பட்டு வருகிறது.
இணையத்தளம் பயன்படுத்தாத பொதுமக்கள் வாக்களிக்கும் விதமாக 110 மையங்களில் வாக்கு சீட்டு முறைப்படி ஜனவரி 2-ம் திகதி முதல் ஜனவரி 30-ம் திகதி வரை வாக்களிக்கவும், கல்லூரி, ஷாப்பிங் மால், பீச் போன்ற இடங்களிலும் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த எடிசன் விருது வழங்கும் விழா 7 நாட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்.
மேலும் மலேசியாவில் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியின் ஏற்பாட்டின் கீழ், மலேசிய நடன கலைஞர்கள், பாடகர்கள், சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சி நடன கலைஞர்கள், பாடகர்கள், காமெடி நடிகர்களை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்நிகழ்ச்சியில் வெளிநாட்டு அமைச்சர்கள் பத்திரிக்கையாளர்கள், பார்வையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று எடிஷன் விருது குழு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக