![]() |
சென்னையில் 9-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் திகதி தொடங்கியது.![]() இப்பிரிவில் 16 படங்கள் கலந்துகொண்டன. சிறந்த படமாக சன் பிக்சர்ஸின் ‘ஆடுகளம்’ தேர்வானது. 2-வது பரிசை சற்குணம் இயக்கிய ‘வாகை சூடவா’ பெற்றது. ‘ஆடுகளம்’ படத்துக்காக இயக்குனர் வெற்றி மாறனுக்கு ரூ.2 லட்சம், தயாரிப்பாளர் கதிரேசனுக்கு ரூ.1 லட்சம் பரிசை இயக்குனர் கே.பாலசந்தர், ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் வழங்கினர். ‘வாகை சூடவா’ இயக்குனர் சற்குணம், தயாரிப்பாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசை நடிகர் சங்க தலைவர் சரத்குமார் வழங்கினார். ஜூரி விருதுக்கு தேர்வான ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் கதை, வசன கர்த்தா பாஸ்கர் சக்தி ரூ.1 லட்சம் பரிசு பெற்றார். மேலும் ‘காவல் தோட்டம்’ தமிழ் நாவலுக்காக சாகித்ய அகடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சு.வெங்கடேசனுக்கு சரத்குமார் ரூ.1 லட்சம் பரிசளித்தார். விழாவில் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், எஸ்.பி.ஜனநாதன், அமீர், பார்த்திபன், ஆதி, நடிகை தன்ஷிகா, சுஹாசினி, ரேவதி, பட அதிபர் ஆனந்தா எல்.சுரேஷ், தங்கராஜ், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். |
சனி, 24 டிசம்பர், 2011
சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் 3 லட்சம் பரிசு பெற்ற ஆடுகளம் திரைப்படம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக