செவ்வாய், 27 டிசம்பர், 2011

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சீயான் விக்ரம்


தமிழ் திரையுலகில் தான் நடித்து வெளிவந்துள்ள ராஜபாட்டை திரைப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீயான் விக்ரம் கலந்து கொண்டார்.
தமிழ் திரையுலகில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ராஜபாட்டை திரைப்படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் சீயான் விக்ரம் பேசியதாவது, நான் சினிமாவையும், நடிப்பையும் கடவுளாக மதிக்கிறேன். அதிகாலை 3 மணிக்கே எழுந்து சாப்பிடாமல் கூட நடித்துள்ளேன்.
நடிப்பை ஒருபோதும் விளையாட்டாக நினைத்து நடித்ததில்லை. திரையில் சில வினாடிகள் வரும் கதாப்பாத்திரத்திற்கு 10 நாட்கள் கூட கடுமையாக பயிற்சி எடுத்து நடித்துள்ளேன். நான் நடித்த ஜெமினி, தூள், சாமி, பீமா போன்ற திரைப்படங்களை பாலிவுட்டில் தயாரிக்க ஆசைப்படுகிறார்கள்.
சமீபத்தில் என்னுடைய நண்பர்கள் சிலர் பாலிவுட் நடிகர் அக்சய் குமாரிடம் பேசிய போது, என்னைப்பற்றி கேட்டிருக்கிறார். ஆனால் எனக்கும், அக்சய்க்கும் நேரடி பழக்க வழக்கங்கள் கிடையாது.
நான் நடித்த திரைப்படங்களுக்கு பாலிவுட்டில் வரவேற்பு இருப்பதால் பேசப்படுகிறேன். மேலும் திரைப்படங்களில் 18, 20 வேடங்களில் நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக