வெள்ளி, 23 டிசம்பர், 2011

தனுஷ் இயக்கும் திகில் திரைப்படம்


தமிழ் திரையுலகில் நாயகன் தனுஷ், இளமைப்பருவத்தில் நிறைய திரைக்கதைகளை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் பாலிவுட் பிரபலங்களை சமீபத்தில் சந்தித்து உரையாடியுள்ளார்.
அபிஷேக் பச்சான், ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் திரைப்படத்தை தனுஷ் இயக்குவதாக தகவல் பரவியது.
ஆனால் தனுஷ் கூறியுள்ளதாவது, நான் பாலிவுட்டில் நட்சத்திர நாயகர்களை வைத்து திரைப்படம் இயக்கப்போவதாக தகவல் பரவியுள்ளது. தற்போது அப்படி எதுவும் முடிவெடுக்க வில்லை. அனேகமாக அடுத்த வருடம்(2012) மத்தியில் நான் இயக்குவது பற்றி உறுதியாக தெரியவரும்.
எனக்கு நடிப்பதை விட, திரைப்படத்தை இயக்குவதில் காதல் அதிகமாக உள்ளது. இளமை பருவத்திலேயே நிறைய திரைக்கதைகளை உருவாக்கினேன். நான் இயக்கும் முதல் திரைப்படமே திகில் திரைப்படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக