ஞாயிறு, 18 டிசம்பர், 2011

கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன்: வடிவேலு


வெற்றிகரமாக ஓடிய “இம்சை அரசன் 23ம் புலிகேசி” படத்தின் 2ம் பாகம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது என்று வடிவேலு கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: தமிழ் படங்களில் இப்போது அருவருப்பான நகைச்சுவை காட்சிகள் வருகின்றன.
இதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. அதுபோன்ற காட்சிகளில் நடிக்க விருப்பம் இல்லை.
அடுத்த கட்டத்துக்கு செல்ல விரும்புகிறேன். இனி கதாநாயகனாக மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன்.
“இம்சை அரசன் 23ம் புலிகேசி” படத்தின் 2ம் பாகம் உருவாகிறது.
இதற்கான பேச்சுவார்த்தை இயக்குனர் சிம்பு தேவனிடம் நடக்கிறது. சமீபகாலமாக நான் விரும்பி நடிப்பது போல் எந்த பாத்திரமும் வரவில்லை.
சிறு, மீடியம் பட்ஜெட் படங்களில் நடிக்க விரும்பவில்லை. இதனால்தான் சமீபகாலமாக படம் ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக