சனி, 31 டிசம்பர், 2011

சமரன் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து பயணமாகும் விஷால்,திரிஷா


தமிழ் திரையுலகில் திரு இயக்கும் சமரன் திரைப்படத்திற்காக விஷால்-திரிஷா தாய்லாந்து செல்கின்றனர்.
தமிழ் திரையுலகில் நாயகன் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தை இயக்கிய திரு, சமரன் என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார்.
முதன் முறையாக விஷாலுடன் நாயகி திரிஷா இணைகிறார். முக்கியமான கதாப்பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.
சமரன் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஒஸ்தி திரைப்படத்தை தயாரித்த பாலாஜி ரியல் மீடியா சமரனை தயாரிக்கிறது.
சமரன் என்றால் போர்வீரன் என்று அர்த்தம். அதாவது வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களும், அதனால் அவனுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்களை எப்படி எதிர்கொள்கிறான் என்பதே சமரனின் கதையாகும்.
2012 ஆம் ஆண்டில் ஆக்ஷன் திரைப்படமாக அமையும் என்று இயக்குனர் திரு கூறியுள்ளார். சமரன் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் ஊட்டியில் 15 நாட்கள் நடக்கிறது. இதையடுத்து வருகிற 20 ம் திகதி விஷால், திரிஷா உட்பட படக்குழுவினர் தாய்லாந்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.


Click Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக