செவ்வாய், 13 டிசம்பர், 2011

திரைப்பட விழாவிற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார் ஜெயலலிதா


சென்னையில் நடக்க இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பில் கடந்த 2003ம் ஆண்டு முதல் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது.
அதன்படி 9வது சர்வதேச திரைப்பட விழா 14ம் திகதி முதல் 22ம் திகதி வரை நடக்கிறது. இவ்விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 140க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.
இந்த விழாவுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஜெயலலிதா, இந்திய திரைப்பட திறனாய்வுக் கழக இயக்குனர் தங்கராஜிடம் வழங்கினார்.
அப்படியே திரைப்பட விழாவை தலைமை வகித்து நடத்தித் தருமாறு, முதல்வரிடம் திரைப்பட விழா குழுவினர் கேட்டுக் கொண்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக