புதன், 14 டிசம்பர், 2011

திரைப்படவிழாவை தவிர்க்கும் அமீர்


சென்னையில் நடக்கும் 9வது சர்வதேச திரைப்பட விழாவில், முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று டைரக்டர் அமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, டைரக்டர் அமீர் அனுப்பியுள்ள கடிதத்தில், 14ம் திகதி முதல் சென்னையில் நடைபெற இருக்கும், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வருக்கு, விழாக்கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
உண்மையில் தரமான தமிழ் சினிமாக்களையும், மூன்று தேசிய விருது பெற்ற தமிழ் படமான "தென்மேற்கு பருவக்காற்று", இந்தியன் பனோரமாவில் கலந்து கொண்ட தமிழ்படமான "செங்கடல்" போன்ற திரைப்படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, பாப்புலாரிட்டி அடிப்படையில் தமிழ் திரைப்படங்களை தேர்ந்தெடுத்த விழாக் கமிட்டி குழுவினரின் செயல் வருத்தத்திற்குரியது.
மேலும் தமிழக அரசின் நிதியாக ரூ.25 லட்சத்தை பெற்றுக்கொண்டு தேசிய விருது பெற்ற திரைப்படத்தை புறக்கணித்தது வருத்தமளிக்கிறது.
ஆகவே, பாரபட்சமாக நடைபெறக்கூடிய இந்த திரைப்பட விழாவில், தமிழக முதல்வர் அவர்கள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும், மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற மாபெரும் தவறினை திரைப்பட விழா கமிட்டியினர் செய்யக்கூடாது என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக