வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

கேரளாவில் இயக்குனர் சேரன்,வசந்த்


கொலிவுட்டின் இயக்குனர்களான சேரனும் வசந்தும் கேரளாவில் நடைபெற்ற சிறைக் கைதிகளுக்கான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கொலிவுட்டின் பிரபல இயக்குனர்களான சேரன் மற்றும் வசந்த் இருவரும் அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்கள்.
தமிழில் சேரன் ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம், முரண் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தன்னுடைய எதார்த்தமான மற்றும் கிராமப் பாணியான நடிப்பால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே சேரன் வைத்துள்ளார். மேலும் கொலிவுட்டின் மற்றொரு இயக்குனரான வசந்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கேரளாவில் திருவனந்தபுரம் மத்திய சிறைச்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேரன் மற்றும் வசந்த் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கேரளா மத்திய சிறையில் சப்பாத்தி போன்ற உணவுப் பண்டங்களை அங்குள்ள சிறைக்கைதிகள் தயாரித்து வெளியில் மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
இதுதொடர்பாக நடந்த விழாவில் இயக்குனர்கள் சேரன் மற்றும் வசந்த், தாமிரபரணி திரைப்பட நாயகி பானு ஆகியோர் விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்து கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக