சனி, 4 பிப்ரவரி, 2012

தனது அடுத்த திரைப்படம் பற்றி யோசிக்கும் கமல்


விஸ்வரூபம் படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேலையில் தனது அடுத்த திரைப்படத்தைப் பற்றி கமல் தீவிரமாக யோசித்து வருகிறார்.
ஓஸ்கர் ஃபிலிம்ஸ் பெரும்பொருட்செலவில் தயாரிக்கவிருக்கும் தனது அடுத்த திரைப்படத்தை ஆரம்பத்தில் கமலே இயக்குவதாக இருந்தார்.
ஆனால் சமீபத்தில் நண்பன் திரைப்படத்தின் பிரத்யேக திரையிடல் காட்சியில் இயக்குனர் ஷங்கரைச் சந்தித்த கமல் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்.
அப்படத்தை ஷங்கர் இயக்கினால் இன்னும் பிரமாண்டமாக இருக்குமே என்று கமல் யோசித்துள்ளார்.
தனது இந்த முடிவை அவர் உடனே தயாரிப்பாளர் ஓஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு தெரிவித்ததால் அவர் இன்னும் சந்தோஷமாகவுள்ளார்.
ஏ.ஆர். ரகுமானும் மேற்படி கூட்டணியில் வேலை பார்க்க உடனே தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் கதாநாயகி பற்றிய பேச்சு எழுந்த போது ஷங்கர் கமல் இருவருக்குமே தோன்றிய பெயர் காத்ரீனா கைஃப்.
இப்படி நாளுக்கு நாள் கூட்டணி களை கட்டிக்கொண்டிருக்கும் இப்படத்துக்கு தனது முந்தைய படம் ஒன்றுக்கு இடப்பட்ட தலைவன் இருக்கிறான் தலைப்பையே சூட்ட கமல் ஆசையாகவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக