சனி, 4 பிப்ரவரி, 2012

ஊடகத்தினருக்கான மெரீனா படக்காட்சி


சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் அரங்கில் ஊடகத்தினருக்கான மெரீனா படக்காட்சி நடந்ததில் பத்திரிக்கையாளர்களுடன் மெரீனா படக்குழுவும் படத்தை பார்த்தனர். 
கொலிவுட்டில் மெரீனா திரைப்படத்தை பசங்க, வம்சம் ஆகிய திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி தயாரித்துள்ளார்.
மெரீனா திரைப்படத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் சிவ கார்த்திகேயன் நாயகனாக அறிமுகமாக, நாயகியாக ஓவியா நடிக்கிறார்.
இவர்களுடன் பசங்க பாண்டியன், கெளதம் புருசோத், சத்தீஷ், ஜித்தன் மோகன், ஆக்காட்டி ஆறுமுகம், சுந்தர்ராஜன், ஜெயஸ்ரீ, செந்தில்குமாரி மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடித்துள்ளார்கள்.
சென்னை மெரீனா கடற்கரை தான் படத்தின் கதைக்களம். சொந்த வாழ்க்கை சோகங்களுடன் மெரீனா கடற்கரையில் இணையும் சிறுவர்களின் வாழ்க்கையை அழுத்தமாக சொல்ல இயக்குனர் பாண்டிராஜ் முயற்சித்துள்ளார்.
கடற்கரை சிறுவர்கள் மேல் பாசமும் பரிவும் காட்டி தபால்கராராக வரும் ஜித்தன் மோகனும், தாத்தா சுந்தரராஜனும் பல உதவிகளை செய்கிறார்கள்.
கடற்கரையில் பிழைப்பை நடத்தும் சிறுவர்கள் பள்ளிக்கு செல்கிறார்களா? அவர்களுக்கு உதவிகளை செய்து ஊக்கப்படுத்தும் தாத்தா சுந்தர் ராஜனின் சோக முடிவு என்ன என்பதை படத்தின் இறுதிக்காட்சியில் இயக்குனர் பாண்டிராஜ் சொல்லியிருக்கிறார்.
மெரினா திரைப்படத்திற்காக இசை-(அறிமுகம்)கிரீஸ், ஒளிப்பதிவு-(அறிமுகம்)விஜய், திரைப்படதொகுப்பு-அத்தியப்பன் சிவா, கலை-கிராபோர்ட், நடனம்-தினேஷ், பி.ஆர்-நிகில் மற்றும் பலர் பணியாற்றியுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக