சனி, 4 பிப்ரவரி, 2012

உற்சாகத்தில் நகுல்


இடையில் தனது படங்கள் எதுவும் சரியாக நடைபெறாமல் இருந்ததையொட்டி கொஞ்சம் சோர்ந்து போயிருந்த நகுல் மீண்டும் உற்சாகமாகிவிட்டார்.
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு தனது அடையாளத்தைக் காட்டியவர் நடிகர் நகுல்.
இடையி்ல் தனது படங்கள் ஏதும் சரியாக ஓடாததால் சோர்வாக இருந்த நடிகர் நகுலுக்கு தற்போது அமளி துமளி, சடுகுடு, நான் ராஜாவாகப்போகிறேன் மற்றும் வல்லினம் ஆகிய நான்கு படங்கள் கைவசம் உள்ளன.
இது குறித்து நகுல் கூறுகையி்ல், இடையில் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாதபோது என் மனதளவில் சோர்ந்து போய்விட்டேன் என்பது தான் உண்மை.
அந்த நேரத்தில் என்னை மிகவும் உற்சாகப்படுத்தி தனது வல்லினம் திரைப்பட கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்ப்பதற்காக கூடைப்பந்து விளையாட்டைக் கற்றுக்கொள்ளச் சொன்னார் அறிவழகன்.
நானும் அவர் சொன்னார் என்பதற்காக அரைகுறை மனதோடு கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
ஆனால் படப்பிடிப்பு தொடங்கி கூடைப்பந்து விளையாட்டு வீரராக நான் நடிக்க வேண்டிய காட்சிகள் வந்த போதுதான் இடையில் அந்த விளையாட்டைக் கற்றுக் கொண்டதன் அருமையை உணர்ந்தேன்.
தற்போது மேற்படி படங்களின் படப்பிடிப்புகள் வரிசையாக நடக்கவிருப்பதால் நான் மிகவும் உற்சாகத்தி்ல் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக