![]() |
கொலிவுட்டில் தனுஷின் திருடா திருடி, சீடன், ஜீவாவின் பொறி, அமீரின் யோகி போன்ற படங்களை சுப்ரமணிய சிவா இயக்கியுள்ளார்.![]() தமிழ்நாட்டின் பிரபல இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'உலோகம்' நாவல் படமாக்கப்பட உள்ளது. இதில் நாயகனாக இயக்குனர் சுப்ரமணிய சிவா நடிக்க உள்ளார். இதுகுறித்து அவர் ஊடகத்தினருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, உலோகம் என்ற புதியபடமொன்றில் நடிக்க உள்ளேன். ஆக்ஸன் படமாக உருவாக உள்ள உலோகத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். தற்போது உலோகம் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன், அங்காடித் தெரு, நான் கடவுள் போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. |
வியாழன், 5 ஏப்ரல், 2012
நாயகனாக அறிமுகமாகும் இயக்குனர் சுப்ரமணிய சிவா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக