செவ்வாய், 23 ஏப்ரல், 2013

பரஸ்பர விவாகரத்து பெற்றார் நடிகை ரேவதி

கொலிவுட்டில் மண்வாசனை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை ரேவதி, அதன் பின் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துள்ளார்.
தேர்தலில் கூட ஒருமுறை போட்டியிட்ட இவர் சமூகப் பிரச்னைகளில் அதிகமான அக்கறை காட்டி வருபவர் ஆவார்.
நாயகி ரேவதிக்கும் கமெராமேனும், இயக்குனருமான சுரேஷ் மேனன் என்பவருக்கும் கடந்த 1986ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து புதியமுகம் எனும் படத்திலும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபரில் இருவரும் மனுத் தாக்கல் செய்தனர்.
ஆறு மாதங்களுக்குப் பின்பு இவ்வழக்கு நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன் ஏப்ரல் 6ம் திகதி விசாரணைக்கு வந்தது.
நடிகை ரேவதியும், சுரேஷ் மேனனும் ஆஜராயினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை இன்று ஏப்ரல் 22ம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
அதன்படி இன்று இவர்கள் இருவருக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக