கொலிவுட்டில் கடந்த 1980ம் ஆண்டுகளில் கொடி கட்டி பறந்த அம்பிகா, ராதா சகோதரிகளுக்கு ஆரம்பத்திலேயே தொழில் துறையிலும் அதிக ஆர்வம் காணப்பட்டனர். |
தாங்கள் நடிக்கும் காலத்திலேயே ஏ.ஆர்.எஸ்., கார்டன் என்ற ஸ்டூடியோவை சென்னையில் நடத்தி வந்தனர். சகோதரிகளில் இளையவரான ராதா திருமணத்துக்கு பின்பு மும்பையில் ஓட்டல் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் கோவளத்தில் அழகு சிகிச்சை மையத்தையும் நடத்தி வருகிறார் நடிகை ராதா. தற்போது சகோதரிகள் இருவரும் இணைந்து கேரளா, தமிழக எல்லையில் புளியரை என்ற இடத்தில் புதிதாக அதி நவீன வசதிகளுடன் கூடிய ஓட்டலை துவங்கியுள்ளனர். செங்கோட்டை, கொல்லம் மெயின் ரோட்டில் உள்ள இவர்களின் ஓட்டல், இந்த பகுதியில் படப் பிடிப்புக்காக வரும் படக் குழுவினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் சகோதரிகள். |
செவ்வாய், 23 ஏப்ரல், 2013
நவீன வசதிகளுடன் அம்பிகாவின் புதிய ஓட்டல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக